Header Ads

Header ADS

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்




மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (09) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிழக்குமாகாண முதலமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்தார்.

சுமார் 300 இற்கும் அதிகமான பட்டதாரிகள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

இதன் போது 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கிழக்குமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.