Header Ads

Header ADS

கொழும்பு குப்பைகளில் 50 வீதமானவை ஹோட்டல்களுக்குரியவை

கொழும்பு நகரில் குவியும் குப்பைகளில், 50 வீதமானவை சிற்றூண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என்பவற்றிலிருந்து வெளியேற்றப்படுபவை என சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவை தமது தவறான நடவடிக்கையினால் நிகழ்பவையல்லவெனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாயின் சிற்றூண்டிச் சாலைகளில் வெளியேறும் கழிவுகளை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.