இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் ஓசோன் பிரிவு ஆகியன இணைந்து குளிர்சாதன மற்றும் குளிரூட்டல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான இலவச NVQ 3 சான்றிதழ் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் ஓசோன் பிரிவு ஆகியன இணைந்து குளிர்சாதன மற்றும் குளிரூட்டல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான இலவச NVQ 3 சான்றிதழ் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கான விரிவுரைகளை போதனாசிரியர் எச். எம். எம். ஹாரீஸ் அவர்கள் வழங்கினார்.
இதன்போது திருகோணமலை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு. ஜயநாத் ஹேரத் மற்றும் உதவி பணிப்பாளர் திரு. ஜயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
www.mulli1s ceylon. lk
No comments