வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ‘ நேர்மை கலாசாரம் - தூய்மையானதொரு இலங்கை’ என்ற தேசிய முன்னெடுப்பில் இணைகிறது
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ‘ நேர்மை கலாசாரம் - தூய்மையானதொரு இலங்கை’ என்ற தேசிய முன்னெடுப்பில் இணைகிறது
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, ஜூலை 27 ஆம் திகதி தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தின் தொடக்கத்தில், ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசிப்பதன் மூலம் ‘நேர்மை கலாசாரம் - தூய்மையானதொரு இலங்கை’ என்ற தேசிய முன்னெடுப்பில் இணைந்தது. இந்நிகழ்ச்சி, செயலாளர் அருணி ரணராஜவின் முன்னிலையில் குடியரசுக் கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய செயலாளர் ரணராஜ, ஒருமைப்பாடு என்பது “எமது அன்றாடத் தெரிவுகளில் பிரதிபலிக்கிறது. மௌனமாக இருப்பது எளிதாக இருக்கும்போது நேர்மையைத் தேர்ந்தெடுப்பதும், முரண்பட்ட நலன்களை எதிர்கொள்ளும்போது நியாயத்தைக் கடைப்பிடிப்பதும், தவறுகள் ஏற்படும்போது பொறுப்பேற்பதும், எப்போதும் நமது சொந்த நலனை விட பொது நலனை முன்னிறுத்துவதும் ஆகும்” என்று கூறினார். இந்த அமைச்சு, இலங்கையை உலகிற்குப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த அமைச்சு நாட்டின் முகமாக விளங்குகிறது என்று வலியுறுத்தினார். எனவே, அமைச்சு மேற்கொள்ளும் ஒவ்வொரு தொடர்பும் நிறுவனத்தை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இலங்கையையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். “ஒவ்வொரு செயலின் மூலமே நேர்மைக் கலாச்சாரம் கட்டமைக்கப்படுகிறது: நேர்மை ஒரு பழக்கமாக மாறும்போது, பொறுப்புக்கூறல் நெறியாகிறது, மேலும் மரியாதை நமது அன்றாடப் பணியின் ஒரு பகுதியாகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, அனைத்து ஊழியர்களும் சிங்களம் மற்றும் தமிழில் உறுதிமொழியை வாசித்து, நேர்மை உறுதிமொழி வழங்கலில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அமைச்சரவையின் ஒருமைப்பாட்டு அதிகாரி, 2025 ஏப்ரலில் அமைச்சரவையில் நிறுவப்பட்ட உள்விவகார அலகு (IAU) குறித்தும், தொடங்கப்பட்ட நாளிலிருந்து அப்பிரிவு ஆற்றிவரும் பணிகள் குறித்தும் சாரம்சமொன்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அமைச்சரவையின் உள்வாரி விவகாரங்கள் பிரிவின் தலைவரால் அமைச்சரவையின் நடத்தைசார் விதிகள் அறிவிக்கப்பட்டன; அவை அமைச்சரவை வளாகத்தில் மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களும், அலுவலகங்களும் இந்நிகழ்வில் மெய்நிகர் ரீதியாக இணைந்தன; இதில் 130க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01






No comments